சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

18-ஆம் கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் அருகே புதர் மண்டி கிடக்கும் 18-ஆம் கால்வாயை தூர் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

தேவாரம் அருகே புதர் மண்டி கிடக்கும் 18-ஆம் கால்வாயை தூர் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தமபாளையம், தேவாரம், போடி பகுதி விவசாயிகளின் நலன் கருதி முல்லை பெரியாறு தண்ணீரை கொண்டு வருவதற்காக 18-ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள நீரின் மொத்த கொள்ளளவு ஆறேகால் டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தால் 18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது இரு அணைகளிலும் பரவலான மழையின் காரணமாக தண்ணீர் அதிகமாக உள்ளது. இதனையடுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுப்பணித்துறையினரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 40 கி.மீ. தொலைவு உள்ள 18-ஆம் கால்வாய் இரண்டு ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது கால்வாய் முழுவதும் புதர் மண்டி மேடும், பள்ளமுமாக உள்ளது.
இந்நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டால், கடைமடை பகுதியான தேவாரம், போடி கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, தண்ணீர் திறப்புக்கு முன்னதாக 18-ஆம் கால்வாயை தூர்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்த கோரிக்கை மனுவை, 18-ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக துணை முதல்வர், மாவட்ட ஆட்சியர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.