சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கம்பம் பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் அமோகம்: விலை குறைவால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்தும் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்தும் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
       கம்பம்  பகுதிகளில் குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும் காய்கறிகளில் கொத்தமல்லி தழை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. 
    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டம்  அதிகரித்ததால், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் இருப்பு உயர்ந்தது. இந்த பருவ காலத்தில், குறுகிய கால பயிர்களான பீட்ரூட், கீரை வகைகள் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டதில், தற்போது கொத்தமல்லி தழை அறுவடைக்கு வந்துள்ளது.
    அதேநேரம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தைகளிலிருந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டாரச் சந்தைகளுக்கு கொத்தமல்லி தழை விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், சந்தைகளில் கொத்தமல்லிக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
    கடந்த வாரங்களில் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30-க்கு விற்பனையானது. தற்போது ரூ.7-க்கு விற்பனையாகிறது. இதை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், அறுவடையின் மூலம் ரூ.14 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளதால், கம்பம் பகுதி விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.