புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வீரபாண்டியில் செல்லிடப்பேசி திருடிய 3 பேர் கைது

வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை காணச் சென்றிருந்தவரின் செல்லிடப்பேசியை திருடியதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 7:15 pm

DIN

வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை காணச் சென்றிருந்தவரின் செல்லிடப்பேசியை திருடியதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
தேனி, பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் சரவணக்குமார்(27). இவர், வீரபாண்டிக்கு சித்திரை திருவிழாவை காணச் சென்றுள்ளார். அங்கு வீரபாண்டி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(23), கருப்பசாமி(23), பழனிக்குமார்(20) ஆகியோர், சரவணக்குமார் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்லிடபேசியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சரவணக்குமார் மற்றும் அப் பகுதியில் இருந்தவர்கள், மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சரவணக்குமார் அளித்த புகாரின் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேல், கருப்பசாமி, பழனிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.