தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தேவதானப்பட்டியில் மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தேனியில் தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்களுக்கு மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 7:01 pm

தேனியில் தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்களுக்கு மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் புரட்சிப் புலிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் கருப்பையா பகடை தலைமை வகித்தார். பொதுச் செயலர் க.திலீபன் முன்னிலை வகித்தார்.
தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்கள் பெருவாரியாக வசித்து வரும் டி.வி.நகர் பகுதியில், அம்மக்களின் பயன்பாட்டிற்கு மயானத்துக்கு இடம் வழங்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.