போடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றைக் கடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி, வெண்ணிமலை தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் பிருதிவிராஜ் (23). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை தோட்ட வேலைக்கு செல்வதற்காக ஊத்தாம்பாறை அருகே கத்தாழம்பாறை பகுதிக்கு சென்றுள்ளார். இவருடன் மேலும் 2 பேர் சென்றுள்ளனர். ஊத்தாம்பாறை ஆற்றை கடந்து சென்றபோது மற்ற தொழிலாளர்கள் கடந்து விட்ட நிலையில், பிருதிவிராஜ் கடக்கும்போது பாறையில் வழுக்கி தண்ணீரில் விழுந்து விட்டார். இதனை கவனிக்காத தொழிலாளர்கள் அவரை காணாமல் திரும்பி வந்து பார்த்துள்ளனர்.
அப்போது தண்ணீரில் ரத்தம் தெரியவே அப்பகுதியில் தண்ணீரில் தேடியபோது தலையில் அடிபட்டு பிருதிவிராஜ் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி

‘பாளையங்கால்வாயை சீரமைக்க சிறப்பு நிதி கோரப்படும்’ - தவெக மாவட்ட இணைச் செயலா்

பசுமைத் தமிழ்நாடு திட்டம்: வனத் துறை-ரோட்டரி சங்கம் ஆலோசனை

பாளை. அருகே பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
