ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

கூடலூர் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 19 பேர் கைது: ரூ. 1.33 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய கேரளத்தைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :2 செப்டம்பர் 2018, 12:49 am IST


தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய கேரளத்தைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணம் வைத்து சூதாடுவதாக கூடலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ஷாஜஹான் போலீஸாருடன், சென்று சோதனை செய்தார். அப்போது அங்குள்ள அறைகளில் பணம் வைத்து சிலர் சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து, 500-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.