உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில்

Updated On :13 பிப்ரவரி 2019, 8:15 am IST

தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
       இப்பள்ளியில், கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்குப் பாராட்டு  மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். தவமணி தலைமை வகித்தார்.
    விழாவில், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியின் நிறுவனச் செயலர் என். ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். இதில், அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்ற  ஏ. நுப்யலா ரகுமத், சங்கீதா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் இடத்தை பிடித்த எஸ். சினேகா, பி. பிருந்தா, தவ்ஹீதா பர்வீன் ஆகியோருக்கு தலா ரூ. 2 ஆயிரமும், 3 ஆம் இடத்தைப் பிடித்த என். மீனா, ஜி. ஹேமலதா, நபீனா அலி ஆகியோருக்கு  தலா  ஆயிரம் ரூபாயும்  ஊக்கத் தொகையாக வழங்கினார். 
    முன்னதாக, முதுகலை ஆசிரியர் எஸ். கண்ணன் வரவேற்றார். ஆசிரியர் எஸ். இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.