தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில், கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். தவமணி தலைமை வகித்தார்.
விழாவில், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியின் நிறுவனச் செயலர் என். ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். இதில், அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்ற ஏ. நுப்யலா ரகுமத், சங்கீதா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் இடத்தை பிடித்த எஸ். சினேகா, பி. பிருந்தா, தவ்ஹீதா பர்வீன் ஆகியோருக்கு தலா ரூ. 2 ஆயிரமும், 3 ஆம் இடத்தைப் பிடித்த என். மீனா, ஜி. ஹேமலதா, நபீனா அலி ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கினார்.
முன்னதாக, முதுகலை ஆசிரியர் எஸ். கண்ணன் வரவேற்றார். ஆசிரியர் எஸ். இளங்கோவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இடையக்கோட்டைக்கு இரவு நேரப் பேருந்து சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

எம்ஆா்பி மூலம் செவிலியா்களை நிரந்தரமாக தோ்வு செய்ய வலியுறுத்தல்

பழனி அருகே சாலையில் கிடக்கும் களி மண்ணை அகற்ற வலியுறுத்தல்

டிராக்டா் நிலைதடுமாறி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
