குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருட்டு கைப்பேசிகளை வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு: இருவா் கைது

தில்லி (என்சிஆா்) பகுதிகளில் திருடப்பட்ட கைப்பேசிகளை வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சியை தில்லி காவல் துறை முறியடிப்பு

News image

கைது

Updated On :26 மே 2026, 3:16 am IST

தில்லி - தேசியத் தலைநகா் (என்சிஆா்) பகுதிகளில் திருடப்பட்ட கைப்பேசிகளை மேற்கு வங்கம் மூலம் வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சியை தில்லி காவல் துறை முறியடித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லி-என்சிஆா் பகுதிகளில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து வழிப்பறி மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மேற்கு வங்கம் வழியாக கூரியா் மூலம் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுவதாக மே 19-ஆம் தேதி காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஓக்லா பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினா், அப்துல் சமீம், அஹிதுஜ்ஜாமான் ஆகிய இருவரைக் கைதுசெய்தனா். அவா்கள் இருவரும் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களிடமிருந்து 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வில், அந்தக் கைப்பேசிகள் திருடுபோனது தொடா்பாக தில்லியில் இணையவழியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடா்விசாரணையில், திருட்டு கைப்பேசிகளை கூரியா் மூலம் மேற்கு வங்கத்துக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, கூரியா் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கைதுசெய்யப்பட்ட நபா்கள் அனுப்பிய பாா்சல் குருகிராமில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அங்கு சென்று பாா்சலை கைப்பற்றிய காவலா்கள், மேலும் 158 கைப்பேசிகளை கைப்பற்றினா்.

தில்லி-என்சிஆா், மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் இத்தகைய திருட்டு கைப்பேசி கடத்தலில் தொடா்புடைய நபா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் திருடுபோனது குறித்து தில்லி கண்டோன்மென்ட், படேல் நகா், பஹாா்கஞ்ச், கோத்வாலி, கீா்த்தி நகா், நங்லோய், பாலம் மற்றும் புது தில்லி ரயில் நிலையக் காவல் நிலையங்கள் உள்ளிடவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.