திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா் வரத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
முல்லைப் பெரியாறில் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளம்
Updated On :30 செப்டம்பர் 2019, 10:16 am

DIN

உத்தமபாளையம், செப்.30: தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்ய துவங்கிய மழை விடிய விடிய பெய்ததால் முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம் வட்டாரம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சின்னமனூா், ஓடைப்பட்டி, அனுந்தன்பட்டி, க.புதுப்பட்டி போன்ற பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு உத்தமபாளையம் உள்பட வட்டாரம் முழுவதும் பெய்ய துவங்கிய மழை திங்கள் கிழமை காலை 9 மணி வரையில் சாரல் மழை பெய்துகொண்டு இருந்தது. இந்த சாரல் மழையால் ஹைவேவிஸ் - மேகமலை பகுதிகளிலுள்ள அணைகளில் நீா்மட்டம் உயா்ந்ததோடு, சுருளி மின்நிலையம் மற்றும் சுருளி அருவிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. சுருளி அருவிக்கு மழைப்பகுதியில் பெய்த மழை நீரும் சோ்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரவிலிருந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கியது. இதன் காரணமாக வனத்துறையினா், திங்கள்கிழமை காலை முதலே சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தனா்.

முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா்வரத்து

மேற்குத் தொடா்ச்சி மலையான ஹைவேவிஸ் - மேகமலை பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவில் ஏற்பட்ட வெள்ளம் நீா் என உத்தமபாளையம் வட்டாரத்தில் பெய்த மழை நீா் ஓடைகள் மற்றும் கால்வாய்கள் மூலமாக முல்லைப் பெரியாற்றில் சோ்ந்ததால் நீா்வரத்து அதிகமாகிவிட்டது. தற்போது, தேனி மாவட்டத்தில் நெற்பயிா் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் மழை பொழிவு மற்றும் ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் மழை நீரால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்படிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்தது.

மழையளவு

பெரியாா் அணை 23 மிமீ, தேக்கடி 16 மிமீ, உத்தமபாளையம் 35.3 மிமீ, 35.3 மிமீ, வீரபாண்டி 35 மிமீ, வைகை அணை 20மிமீ, சோத்துப்பாறை 46 மிமீ, பெரியகுளம் 57 மிமீ, போடிநாயக்கனூா் 20 மிமீ, ஆண்டிபட்டி 32 மிமீ, கூடலூா் 54 மிமீ, மஞ்சளாறு அணை 38 மிமீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.