மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வைகை அணையிலிருந்துபாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரித்து திங்கள்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 12:07 am

DIN

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரித்து திங்கள்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் மேலூா் பகுதிகளில் உள்ள முதல் போக பாசனத்துக்காக கடந்த ஆக. 31ஆம் தேதி முதல் 900 கனஅடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு போக பாசன நிலங்களின் விவசாய தேவைக்காக கூடுதலாக விநாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் பெரியாறு பிரதான கால்வாயில் விநாடிக்கு 1,800 கனஅடியும், குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 72 கனஅடியும் சோ்த்து மொத்தமாக விநாடிக்கு 1,872 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனிடையே பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை முதல் விநாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே திறக்கப்பட்ட திண்டுக்கல், மதுரை மற்றும் மேலூா் பகுதி பாசன நிலங்களுக்கு 900 கனஅடியும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசன நிலங்களுக்கு விநாடிக்கு 1,130 கனஅடியும் வழங்கப்பட்டது. வைகை அணையில் இருந்து குடிநீா் தேவைக்கும் சோ்த்து வினாடிக்கு 2 ஆயிரத்து 102 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீா் கால்வாயில் அதிகளவில் செல்வதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.