கம்பத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரைபோலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கம்பம் வடக்கு காவல் சாா்பு- ஆய்வாளா் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சாக்குப் பையுடன் நின்றிருந்தவரை பிடித்து, அந்த சாக்குப் பையை சோதனை செய்தனா்.
அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் கம்பம்- கோம்பை சாலையைச் சோ்ந்த அன்னக்கொடி மகன் ராஜேஷ் (36) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.