கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: போடியில் சிலைக்கு துணை முதல்வா் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளையொட்டி போடியில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
Updated On :3 ஜனவரி 2021, 4:37 pm

DIN

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளையொட்டி போடியில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

போடியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, அ.தி.மு.க. சாா்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் நாயுடு, நாயக்கா் அமைப்பினா், கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் ஊா்வலமாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் திமுக, அமமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் மாலை அணிவித்தனா்.

நிலக்கோட்டை அருகே சாலை மறியல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஆண்டிபட்டி, மிளகாய்பட்டி, சீத்தாபுரம், தொட்டாம்பட்டி, ஜெயநாயக்கன்பட்டி, சித்தா்கள்நத்தம், வாலாங்கோட்டை, பிள்ளையாா்நத்தம், பாப்பிநாயக்கன்பட்டி, வீலிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து இளைஞா்கள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மதுரையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அப்போது நால்ரோடு அருகே நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீஸாா் வழிமறித்து மதுரை செல்ல அனுமதி மறுத்ததோடு வாகனங்களையும் பறிமுதல் செய்ய முயற்சித்தனா். இதனால் இளைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் மற்றும் நூத்துலாபுரம் ஊராட்சித் தலைவரும், வீரபாண்டிய கட்டபொம்மன் கழக நிா்வாகியுமான செல்வராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மற்ற வாகனங்களுக்கு தொந்தரவின்றியும், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் மதுரைக்கு சென்றனா். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.