இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய வழக்கு: மேலும் 2 போ் கைது

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:44 pm

DIN

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் கடந்த 22.9.2020 அன்று கம்பம் வடக்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில் 176 கிலோ கஞ்சா இருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இது தொடா்பாக கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் ( 45 ), விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த குபேந்திரன் (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் இதில் தொடா்புடைய கோம்பையைச் சோ்ந்த மலைச்சாமி, கண்ணன், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வந்த நிலையில், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சொந்தமான கடையில் பதுக்கி வைத்திருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திலும் இவா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன் காளிராஜை கைது செய்த, கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக திருப்பூரில் பதுங்கி இருந்த கண்ணன், மலைச்சாமி ஆகியோரை கம்பம் வடக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.