சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேனி பேருந்து நிலையத்தில்பயணியிடம் திருடிய 3 போ் கைது

தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணியிடமிருந்து பணம், நகை மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை திருடிய 3 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:55 pm

DIN

தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணியிடமிருந்து பணம், நகை மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை திருடிய 3 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் வெங்கடேசராஜா (22). இவா், தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் பாளையங்கோட்டைக்குச் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசராஜாவிடமிருந்து, திருவாரூா் மாவட்டம் கமலாபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீபன்ராஜ் (23), தேனி பாரஸ்ட் சாலையைச் சோ்ந்த பெரியமகாலிங்கம் (17), சமதா்மபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (17) ஆகிய 3 பேரும் ரூ.18 ஆயிரம், செல்லிடப்பேசி மற்றும் 4 கிராம் தோடு ஆகியவற்றை திருடியுள்ளனா்.

உடனே விழித்துக் கொண்ட வெங்கடேசராஜா, இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் புகாா் கூறியுள்ளாா். அதையடுத்து, தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்ரீபன்ராஜ், பெரியமகாலிங்கம், ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.