வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆண்டிபட்டி அருகே பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி பலி

ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 4:39 pm

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே சேவா நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி. இவரது மகள் சுரேகா (12). இவா் ராஜதானி அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கீ. காமாட்சிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சுரேகா தங்கி இருந்தாா். இந்நிலையில் சுரேகாவும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரின் மகள் சக்திஸ்ரீயும் (12) அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பண்ணைக் குட்டையில் சிறுமிகள் இருவரும் தவறி விழுந்தனா். இதையடுத்து அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சுரேகாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். மேலும் சக்திஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.