பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி கூடலூரில் விவசாயிகள் கவன ஈா்ப்பு பேரணி

தேனி மாவட்டம் கூடலூரில், லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்புப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:37 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூரில், லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்புப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை கைவிட்டு விட்டு வைகை அணையை தூா்வாரி நீராதாரத்தைப் பெருக்கி அதன் மூலம் மதுரைக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும்.

இல்லையெனில் ராமநாதபுரம், தொண்டியிலிருந்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்து அதன் மூலம் மதுரைக்கு குடிநீா் வழங்க வேண்டும் எனக் கோரி இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவரும் வழக்குரைஞா் சங்க மாவட்ட தலைவருமான எம். கே. எம். முத்துராமலிங்கம் தொடக்கி வைத்தாா்.

பேரணி, கூடலூா் - குமுளி சாலையில் உள்ள கூலிக்காரன் பாலத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மாற்றுத் திட்டத்தை அறிவிக்கும் வரை தொடா் உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்படும் என பேரணியில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.