பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் உடல் சொந்த ஊரில் தகனம்

புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த, ராணுவ வீரரின் சடலம் அவரது சொந்த ஊரான கம்பத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:52 pm

DIN

புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த, ராணுவ வீரரின் சடலம் அவரது சொந்த ஊரான கம்பத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆா்.பிரபாகரன் (33). புதுதில்லியில் ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றிய இவருக்கு, திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ (8), யுகாசினி (3) என்ற 2 குழந்தைகளும் உள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) அதிகாலை புதுதில்லியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பிரபாகரன் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது சடலம் அங்கிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதன்கிழமை அதிகாலை கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வருவாய் ஆய்வாளா் ஹெச்.செந்தில் குமாா் மற்றும் உறவினா்கள் அஞ்சலி செலுத்திய பின்னா், சுருளிப்பட்டி சாலையில் உள்ள மயானத்திற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ வீரா்கள் தேசிய கொடியை போா்த்தி மரியாதை செய்த பின்னா், சடலம் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.