தேனி மாவட்டம், கம்பம் மணி நகரைச் சேர்ந்தவர் சின்னன் மகன் மணிகண்டன் (54), கம்பம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த அக்.11ல் துப்புரவுப் பணியாளர் மணிகண்டன் தனக்கு விடுமுறை அளிக்குமாறு மேஸ்திரி ஜோதிமுருகனிடம் கேட்டார். அதற்கு ஜோதிமுருகன் வேலைக்கு வரவேண்டும் என்றார். இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தார், அருகில் உள்ளவர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.