தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 

News image
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நீர்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள்.
Updated On :30 செப்டம்பர் 2021, 12:27 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 

நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள், பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன், ஆண்டு தோறும் கள ஆய்வில் 21 நாள்கள் அணைகள், மற்றும் மின்நிலையங்களை ஆய்வு செய்வது வழக்கம். 

இதன் ஒரு பகுதியாக மதுரை ஸ்டாப் டிரைனிங் இன்ஸ்டியூட் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன பொறியாளர்கள் 30 பேர்கள் இயக்குநர் திலகவதி தலைமையில் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக இவர்கள் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணி துறையினரின் இரண்டு படகுகளில் அணைக்கு சென்றனர். 

அங்கு பெரியாறு அணை, மதகுப்பகுதி, பேபிஅணை ஆகியவற்றில் களஆய்வு நடத்தினர்.  இந்த ஆய்வின்போது தமிழக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிப்பொறியாளர்கள் ராஜகோபால், குமார் பயிற்சி அலுவலர்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.