தேனி மாவட்டம், கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
நகரத் தலைவர் சிராஜ்தீன் தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆம்புலன்சை அர்ப்பணித்து, இலவச சேவை, குறைந்த கட்டணத்தில் இயங்குவது குறித்துப் பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். எம். ரபீக் அஹமது, ஜமாஅத்துல் உலமா பேரவை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பாஹி, தேனி மாவட்ட தலைவர் எச்.அபூபக்கர் சித்தீக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மேலும் கம்பம், கூடலூர், போடி ஆகிய ஊர்களில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகங்களை மாநில தலைவர் நெல்லை முபாரக் திறந்து வைத்தார்.