காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா முகாம்

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் இன்று (அக்.23) நடைபெற்றது.

News image

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா முகாம்

Updated On :28 ஜனவரி 2024, 9:56 am IST

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் இன்று (அக்.23) நடைபெற்றது.

முகாமிற்கு சருத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திகண்ணையன் தலைமை வகித்தார். நேருயுவகேந்திரா கணக்காளர் ஸ்ரீராம்பாபு, வட்டாரவளர்ச்சி அலுவலர் சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி வரவேற்புரையாற்றினார்.

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு, சுகாதாரப்பணிகள் மற்றும் தூய்மை குறித்து பேசினார். மேலும் தூய்மை இந்தியா திட்ட முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சருத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மகளிர் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர், சருத்துப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. முகாமில் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளர் பாத்திமாமேரி சில்வியா, விழுதுகள் இளைஞர் மன்ற துணைத்தலைவர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழுதுகள் இளைஞர் மன்ற செயலாளர் அஜீத்பாண்டி நன்றியுரையாற்றினார். முகாமிற்கான ஏற்பாடுகளை விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.