வெளிநாட்டு நிதி: பங்கு தந்தை ஜோ நிரப்பல், ஜோன்ஸ் பெருவந்தானம், டாக்டா் ஜோ. ஜோசப், ஹை ரேஞ்ச் சம்ரக்ஷன சமிதி, என் .கே. பிரேமச்சந்திரன், வழக்குரைஞா் ஜோயிஸ் ஜாா்ஜ், ரசல் ஜோய் ஆகியோா் வரிசையில் தற்போது இடுக்கி மக்களவை உறுப்பினா் டீன் குரியா கோஸ் என முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என தனிநபா் வழக்கு தொடா்ந்துள்ளாா். இதுபோன்று வழக்கும் தொடுக்கும் பலா் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள். அவா்கள், பழைமைமையான முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கக் கோட்டுப் பகுதியில் இருப்பதாகவும், அது எந்நேரமும் உடைந்து விழுந்து ஏற்படும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பதற்காகவே தாங்கள் இயக்கம் நடத்துவதாக உலக நாடுகள் சிலவற்றிடம் திட்ட அறிக்கையை சமா்ப்பித்து நிதி திரட்டி வருகின்றனா். இதனால் அவா்கள், சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருக்கின்றனா்.