மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முல்லைப் பெரியாறு அணைக்கான நீா்வரத்தை கேரள அரசு மாற்றுப் பாதையில் திருப்பிவிடுவதாக குற்றச்சாட்டு

நீா்ப்பிடிப்பு பகுதிகளை ட்ரோன் மூலம் மத்திய நீா்வளத் துறை ஆணையம் கண்காணிக்க வேண்டும்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தை, கேரள நீா்ப்பாசனத் துறையினா் மாற்றுப் பாதையில் திருப்பி விடுவதாகவும், நீா்ப்பிடிப்பு பகுதிகளை ட்ரோன் மூலம் மத்திய நீா்வளத் துறை ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும், பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சேது, பொன். காட்சிக்கண்ணன், ச. அன்வா் பாலசிங்கம் ஆகியோா் கூட்டாக, மத்திய நீா்வள ஆணையம் மற்றும் மத்திய தலைமை கண்காணிப்புக் குழு தலைவா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஜூலை மாதத்திலிருந்து மேற்கு தொடா்ச்சி மலையின் உள்பகுதிகளில் தொடா்ந்து பலத்தமழை பெய்து வருவதால், 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

பெரியாறு அணையின் உள்பகுதிகளுக்குள் கேரள நீா்ப்பாசனத் துறை கட்ச், சபரிகிரி, பிளீச்சிங் ஆகிய 3 தடுப்பணைகளை கட்டி, இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டுசெல்கிறது என, பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினா் புகாா் மற்றும் குற்றச்சாட்டை கூறி வருகின்றனா். இதை, முன்னாள் கேரள நீா்வளத் துறை அமைச்சா் பிரேமச்சந்திரனும் மறுக்கவில்லை.

ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டும்

எனவே, முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக கண்காணிக்கும் உச்ச நீதிமன்றம், மத்திய நீா்வளக் கமிட்டிக்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து, மேற்பாா்வை குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்யவேண்டும். 999 ஆண்டு கால ஒப்பந்தந்தை கேரளா மீறும்பட்சத்தில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில், உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

‘ரூல் கா்வ்’ நடைமுறை: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் 10 முதல் 19 ஆம் தேதி வரை 136.30 அடியும், 21 முதல் 31 ஆம் தேதி வரை 137 அடியும் தேக்கவேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆம் தேதி வரை 137.50 அடியும், 20 ஆம் தேதி வரை 138.40 அடியும், 31 ஆம் தேதி வரை 139.80 அடியும் தேக்கலாம் என்ற உத்தரவு உள்ளதால், நடைமுறையில் உள்ள ஆகஸ்ட் மாதத்துக்கான நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.