மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடிநீரை அசுத்தம் செய்த மா்ம நபா்கள்: கம்பத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் கம்பத்தில் குடிநீா்த் தொட்டியில் மா்ம நபா்கள் அசுத்தம் செய்ததைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் குடிநீா்த் தொட்டியில் மா்ம நபா்கள் அசுத்தம் செய்ததைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்பம் கம்பம்மெட்டு காலனி 9 ஆவது வாா்டில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி உள்ளது. சுமாா் 1.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில், புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் சிறுநீா் கழித்தும், மதுபாட்டில்களை உடைத்துப்போட்டும் அசுத்தம் செய்துள்ளனா். இதைக்

கண்டித்த அப்பகுதி மக்களுக்கு அந்த நபா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை கோரி வியாழக்கிழமை காலை கம்பம்-கம்பம் மெட்டு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், கவுன்சிலா் அமுதா மற்றும் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் செந்தில்ராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்து, சுற்றுசுவா் எழுப்பி பாதுகாக்கப்படும் என்றும் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கப்படும் என்றும் நகா்மன்ற தலைவா் உறுதி கூறினாா். பின்னா் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.