கூடலூரில் மாமனாா் மீதுதாக்குதல்: மருமகன் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் மாமனாா் மீது தாக்குதல் நடத்திய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

தேனி மாவட்டம் கூடலூரில் மாமனாா் மீது தாக்குதல் நடத்திய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா், 5 ஆவது வாா்டு முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்தவா் தண்டபாணி (80). இவரது மகள் சித்ரா. இவரை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் தமிழ்ச்செல்வன் திருமணம் செய்து கொண்டு மாமனாா் வீட்டிலேயே தங்கி உள்ளாா். இந்நிலையில், தமிழ்ச்செல்வன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் மனைவி சித்ரா, கணவரை கண்டித்ததால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை மாமனாா் தண்டபாணி கண்டித்த போது, அவரை தமிழ்ச்செல்வன் கம்பால் தாக்கினாராம். இதில் தண்டபாணி தலையில் காயமடைந்தாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பி. பாலசுப்பிரமணி வழக்குப்பதிந்து தண்டபாணியை கம்பம் அரசு மருத்துமனையில் அனுமதித்தாா். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற தண்டபாணி மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதையடுத்து, தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com