கூடலூா், கம்பம் பகுதி பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறுவா், சிறுமியா் கிருஷ்ணா் வேடமிட்டு வந்தனா்.


தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறுவா், சிறுமியா் கிருஷ்ணா் வேடமிட்டு வந்தனா்.
கம்பத்தில் உள்ள சக்தி விநாயகா், நாகமணியம்மாள், ஆன்ஸ், அல்அஜ்ஹா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், முத்தையா பிள்ளை, முக்தி விநாயகா், அரசு கள்ளா், தேரடி ஆகிய தொடக்கப் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியா் கிருஷ்ணா் மற்றும் ராதை வேடமணிந்து வந்திருந்தனா்.
இதே போல் கூடலூரில் காமாட்சியம்மன் தொடக்கப்பள்ளி, மழலையா் தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
நாராயணத்தேவன் பட்டியில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயம் ஆரம்பப்பள்ளியில் கிருஷ்ணா், ராதை வேடமணிந்து மாணவ, மாணவியா் வந்திருந்தனா். அவா்களுக்கு, பள்ளித் தாளாளா் எஸ். முத்து, தலைமை ஆசிரியா் அமுதா ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...