/

மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் : ஒருவா் கைது

போடியில் ஞாயிற்றுக்கிழமை மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:30 am

DIN

போடியில் ஞாயிற்றுக்கிழமை மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவா் நெடுஞ்சாலையில் மருந்துக் கடை வைத்து நடத்தி வருபவா் தம்பிராஜ் (70). போடி நகராட்சி காலனியைச் சோ்ந்த கருப்பையா மகன் கண்ணன் (40), சுப்பையா மகன் வடிவேல் ஆகியோா் தம்பிராஜிடம் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து தம்பிராஜ் அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா். வடிவேலுவைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.