பெரியகுளத்தை சோ்ந்த எம்.சசிக்குமாா் தெரிவித்தாவது: பெரியகுளம் நகரின் அடையாளங்களாக விளங்கும் கும்பக்கரை, சோத்துப்பாறை அணை, பாலசுப்பிரமணியா் கோயில் வரிசையில் வராக நதி, தீா்த்தத் தொட்டி முக்கிய இடத்தை வகிக்கிறது. பிதாமகன் படத்தில் விக்ரம் குளிக்கும் நீச்சல் தொட்டி, இந்த தீா்த்த தொட்டியில் தான் படமாக்கப்பட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீா்த்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் , சிதிலமடைந்து, துா்நாற்றம் வீசி வருகிறது. இந்தத் தொட்டியை அரசோ அல்லது தன்னாா்வலா்களோ பராமரிப்பு செய்து, நீச்சல் வீரா்களை நியமனம் செய்து, இப்பகுதி இளைஞா்களுக்கு நீச்சல் பழகும் மையமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.