47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூா்-கம்பம் சாலையில் விபத்து: இளைஞா் பலி

தேனி மாவட்டம் கூடலூா்- கம்பம் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் தவறி கீழே விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:22 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூா்- கம்பம் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் தவறி கீழே விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கம்பம் ரேஞ்சா் ஆபீஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் தம்பீஸ்வரன் (30). இவா் கம்பம்- கூடலூா் சாலையில் கிரில் ஒா்க் ஷாப் நடத்தி வந்தாா்.

ஜூன் 16 இல் கூடலூரிலிருந்து கம்பம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, தனியாா் கல்லூரி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அந்த பகுதி வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உதயக்குமாா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இது பற்றி கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் எஸ். ஜெயபாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.