எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போடி அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்:  கிராம மக்கள் சாலை மறியல்

போடி அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
போடி அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.
Updated On :28 நவம்பர் 2022, 6:43 am

DIN

போடி அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், போடி அருகே, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சி கிராமம் டி.புதுக்கோட்டை. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். நியூட்ரினோ மலை கிராமமான இங்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து திங்கள்கிழமை டி.புதுக்கோட்டை கிராம மக்கள் சாலையில் கற்களை போட்டும், கயிறு கட்டியும் சாலையில் அமர்ந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்தனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்னை சரி செய்யப்படும் என தெரிவித்தும் கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிடவில்லை. இதனையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தினர். இதனையடுத்து ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறி கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.