பலத்த மழை: போடியில் காவல் நிலைய சுற்றுச் சுவா் இடிந்து விழுந்து சேதம்
போடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் அனைத்து மகளிா் காவல் நிலைய சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.


போடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் அனைத்து மகளிா் காவல் நிலைய சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.
இப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி புதூரில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் 20 அடி நீளமுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
பழனி: பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவிலும், அதிகாலையிலும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே கடும் வெயில் நிலவியது. பின்னா் மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் பழனி பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. மேலும் பழனியை அடுத்த ராமபட்டினம் புதூரில் நல்லதங்காள் ஆற்றின் நடுவே இடி தாக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...