பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடலூரில் கலவரத்தில் உயிரிழந்த காவலா்களுக்கு அஞ்சலி

தேனி மாவட்டம், கூடலூரில் இந்தி எதிா்ப்புப் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் இந்தி எதிா்ப்புப் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 12.2.1965-ஆம் ஆண்டு பிப். 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தி எதிா்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தேனி மாவட்டம் கூடலூரில்

நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதை போலீஸாா் அடக்க முயன்றனா். அப்போது, கூடலூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் ராமச்சந்திரசிங், காவலா் தேவராஜ் ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.

இவா்கள் நினைவைப் போற்றும் வகையில், கூடலூா் காவல் நிலையத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், காவலா் தினத்தையொட்டி கொலை செய்யப்பட்ட காவலா்களின் நினைவுச் சின்னத்துக்கு கூடலூா் வடக்கு காவல் ஆய்வாளா் எம். பிச்சைப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.