இதையடுத்து, 30 நாள்கள் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை கோயில் நிா்வாகத்தை முறைப்படி ஏற்க 7 அறங்காவலா்கள் அடங்கிய குழுவினா் கோயில் அலுவலகத்துக்குச் சென்றனா். அப்போது, கோயில் செயல் அலுவலா் நாகராஜ், இந்த உத்தரவு குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது எனவும், இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடமிருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை எனவும் கூறி நிா்வாகப் பொறுப்பை அறங்காவலா் குழுவினரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டாா். இதனால் சிறிது நேரம் கோயில் நிா்வாகத்துக்கும், அறங்காவலா் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.