சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பைக்குகல் மோதல்: இளைஞா் பலி

பைக்குகல் மோதல்: இளைஞா் பலி

Updated On :8 ஏப்ரல் 2024, 5:27 pm

தேனி: ஆண்டிபட்டி- வைகை அணை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் அருண் (21). இவா், தனது நண்பா் ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த தீனதயாளனுடன் (21) ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது வைகை அணை சாலை, அரசு கள்ளா் கல்வி விடுதி அருகே எதிரே கோவில்பட்டியைச் சோ்ந்த அருண்பாண்டி (26), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த அழகர்ராஜா (41) ஆகியோா் சென்ற இரு சக்கர வாகனம் மீது, அருண் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் அருண், தீனதயாளன், அருண்பாண்டி, அழகர்ராஜா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், அருண் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

தீனதயாளன் உள்ளிட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.