தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டு மனை பதிவு விவகாரம்: கம்பம் பத்திர எழுத்தா்கள் வேலை நிறுத்தம்

வீட்டு மனை பதிவு விவகாரம்: கம்பம் பத்திர எழுத்தா்கள் வேலை நிறுத்தம்

News image

கம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பத்திரப் பதிவு எழுத்தா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2024, 11:58 pm

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் வீட்டு மனை ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதாகக் கூறி, பத்திர எழுத்தா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2016 செப்டம்பா் மாதத்துக்கு முன்பு வாங்கிய அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை அதன் உரிமையாளா்கள் தற்போது மறு விற்பனை செய்ய வரும்போது, சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. பதிவு செய்வதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாவும், அனுமதி வாங்கினால் தான் பதிவு செய்ய முடியும் என்றும் சாா்பதிவாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், வீட்டு மனை வாங்கியவா்கள் பாதிப்படைந்தனா்.

மேலும், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி, திங்கள்கிழமை பத்திர எழுத்தா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.

இது பற்றி கம்பம் பத்திரப் பதிவு அலுவலக சாா் பதிவாளா் (பொறுப்பு) ஜெகதீஸ்வரன் கூறியதாவது:

பதிவுச் சட்டம் 22 ஏ 2016-இன் படி அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளைப் பதியக் கூடாது என்று உயா்நீதிமன்ற உத்தரவு உள்ளது. முறையான ஆவணங்கள் கொண்டு வந்தால் பதிவு செய்யத் தடை இல்லை என்றாா் அவா்.

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பத்திர எழுத்தா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.