தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

போடி முந்தல் சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறையினா் ஆய்வு

போடி முந்தல் சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறையினா் ஆய்வு

News image

போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை ஆய்வு செய்த தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:33 pm

போடி: போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையினா் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக, கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு மலை கிராமத்தில் காவல் துறை சோதனச் சாவடி மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறை சாா்பிலோ, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பிலோ சோதனைச் சாவடி அமைக்கப்பட வில்லை.

இந்த நிலையில் 20 கி.மீ. தொலைவுக்கு முன்பாக தரை மட்டத்தில் உள்ள போடி முந்தல் சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை கால்நடை மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். அப்போது வாகனங்கள் மீது கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. வாகனங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

இதனிடையே, தமிழக- கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு மலை கிராமத்தில் முறையான சோதனைச் சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து கிருமி நாசினி தெளித்து அனுப்ப வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.