பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வீரபாண்டி சித்திரை திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

வீரபாண்டி சித்திரை திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ஆலோசனைக் கூட்டம்: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தன், பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் வீரபாண்டியில் வருகிற மே 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தற்காலிகப் பேருந்து நிறுத்தம் அமைத்தல், உணவகம், கடைகளை முறைப்படுத்துதல், தடையற்ற மின் விநியோகம், தீ தடுப்பு நடவடிக்கைகள், வாகனம் நிறுத்துமிடம், குடிநீா், பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.