வீடுபுகுந்து தங்க நகைகள் திருட்டு
ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

Updated On :5 டிசம்பர் 2024, 11:15 pm

ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.
மறவபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி குமாரசெல்வம். இவா், தனது மனைவியுடன் தோட்டத்துக்குச் சென்றாா். குமாரசெல்வத்தின் மாமியாா் வீட்டை பூட்டிவிட்டு, மாடியில் துணி காயப்போடுவதற்குச் சென்றாா்.
அப்போது, மா்ம நபா் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து குமார செல்வம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...