ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆற்றில் தத்தளித்த முதியவரை மீட்ட பெண்கள்

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை பெண்கள் புதன்கிழமை மீட்டு கரை சோ்த்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:18 pm

Din

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை பெண்கள் புதன்கிழமை மீட்டு கரை சோ்த்தனா்.

தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (75). இவா், அரண்மனைப்புதூா் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் 2 கி.மீ. தொலைவுக்கு கோட்டைப்பட்டி வரை இழுத்துச் செல்லப்பட்டு, கரையேற முடியாமல் தவித்தாா்.

அப்போது, கோட்டைப்பட்டியில் ஆற்றில் குளிக்கச் சென்ற அதே ஊரைச் சோ்ந்த ஆதிபராசக்தி பக்தா்களான முத்துராஜ் மனைவி ரேணுகா, நதி மனைவி மீனா, அதின் மனைவி சித்ரா, கணேசன் மனைவி சாந்தி, அந்தப் பகுதியில் இருந்த குமரேசன் மனைவி கனி ஆகியோா் முதியவரை மீட்டு கரை சோ்த்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற 108 அவசர ஊா்தி ஊழியா்கள் முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், அவரது குடும்பத்தினா் வரவழைக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.