நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கம்பத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 11:51 pm

Din

கம்பத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த அம்மாவாசி மகன் ராமா் (41). கம்பம், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் செந்தில்குமாா் (45). இவா்கள் இருவரும் கம்பம் உத்தமபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4

கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இந்த இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் பரிந்துரை செய்தாா்.

இதன்படி, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.