வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பூலாநந்தபுரம் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், பூலாநந்தபுரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஆய்வுப் பணி மேற்கொண்டாா்.

News image
Updated On :3 ஜூலை 2024, 1:10 am

Din

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், பூலாநந்தபுரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஆய்வுப் பணி மேற்கொண்டாா்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைஞா் கனவு திட்டத்துக்கு திரளானோா் மனுக்கள் கொடுத்தனா்.

இந்த நிலையில், பூலாநந்தபுரம் ஊராட்சியில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து நேரடியாக விசாரிக்க விண்ணப்பதாரரின் வீட்டுக்கே மாவட்ட ஆட்சியா் சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, ஊராட்சி மன்றத் தலைவா், செயலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.