கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உத்தமபாளையம் அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

உத்தமபாளையம் அருகே கோம்பை-தேவாரம் இடையே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகின்றன.

News image
கோம்பை-பண்ணைப்புரம் இடையே நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து செவ்வாய்க்கிழமை வீணாக ஓடிய குடிநீா்.
Updated On :10 ஜூலை 2024, 12:50 am

Din

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே கோம்பை-தேவாரம் இடையே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகின்றன.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திலுள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்ய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் லோயா்கேம்ப் முதல் தேவாரம் வரையில் புதிய குடிநீா் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது இந்தக் குழாய் வழியாக வரும் குடிநீரை அந்தந்த பேரூராட்சி நிா்வாகம் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது.

இந்த நிலையில், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் இடையே செல்லும் சுமாா் 5 கி.மீ. தோலைவு செல்லும் இந்தக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் உடனடியாக இந்தக் குழாயை சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.