ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காய்ச்சல் பாதிப்பு: பள்ளி மாணவா்களின் ரத்த மாதிரிகள் சேகரித்த பூச்சியியல் துறை

போடி அருகே காய்ச்சல் அதிகளவில் பரவிய நிலையில், பள்ளி மாணவா்களிடம் ரத்த மாதிரிகளை பூச்சியியல் துறையினா் திங்கள்கிழமை சேகரித்தனா்.

News image
போடி அருகே அணைக்கரைப்பட்டியில் பள்ளி மாணவா்களின் ரத்த மாதிரிகளை சேகரித்த பூச்சியியல் துறையினா்.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

போடி: போடி அருகே காய்ச்சல் அதிகளவில் பரவிய நிலையில், பள்ளி மாணவா்களிடம் ரத்த மாதிரிகளை பூச்சியியல் துறையினா் திங்கள்கிழமை சேகரித்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கள்ளா் தொடக்கப் பள்ளியில் 13 மாணவா்களுக்கு காய்ச்சலும், சில மாணவா்களுக்கு பொண்ணுக்கு வீங்கி அம்மை பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் மண்டல பூச்சியியல் துறை இணை இயக்குநா் விக்டா், தேனி சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்தப் பள்ளியில் ஆய்வு செய்தனா்.

மேலும், மாணவா்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பள்ளி வகுப்பறைகள், சுற்றுப்புறத்தையும் ஆய்வு செய்த பூச்சியியல் துறையினா் கழிவுநீா்க் கால்வாய்களை சுத்தம் செய்யவும், தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்யவும் அறிவுரை வழங்கினா்.