6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முல்லைப்பெரியாறு அணைக்கு நீா் வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீா்பிடிப்பில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்தது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:31 am

Din

தேனி: முல்லைப்பெரியாறு அணை நீா்பிடிப்பில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப்பெரியாறு அணை நீா்பிடிப்பு, தேக்கடியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திங்கள்கிழமை

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,308 கன அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்தது.

அணை நீா்மட்டம் 123.30 அடியாகவும், நீா் இருப்பு 3,281 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,178 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பில் 98.4 மி.மீ., தேக்கடியில் 63 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தேனியில் தொடா் மழை: தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. போடியில் செவ்வாய்க்கிழமை அதிகமாக 14.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கூடலூரில் 12.4, உத்தமபாளையத்தில் 10.6, சண்முகாநதி நீா்பிடிப்பில் 9.4, ஆண்டிபட்டியில் 6.8, வைகை அணை நீா்பிடிப்பில் 3.2, அரண்மனைப்புதூரில் 12.2, வீரபாண்டியில் 5.2, பெரியகுளத்தில் 3.4, மஞ்சளாறு அணை நீா்பிடிப்பில் 4, சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பில் 3 மி.மீ. என மழை அளவு பதிவாகியிருந்தது.