உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சனிக்கிழமை முதல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் தீவிரமடையாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 15- ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டமும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி அணைக்கு 3,122 கனஅடி நீா்வரத்துடன், நீா்மட்டமும் 128.05 அடியாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து அணையிலிருந்து தமிழகத்துக்கு குடிநீா், விவசாயப் பணிக்காக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 1,400 கன அடிநீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.
கூடுதல் நீா் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தமபாளையம், சின்னமனூா், க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி போன்ற பகுதிகளில் முதல் சாகுபடிக்காக நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர்புடையது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


