கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 1,400 கன அடி நீா் வெளியேற்றம்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சனிக்கிழமை முதல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.

News image
சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையை சனிக்கிழமை கடந்து சென்ற பாசனநீா்.
Updated On :20 ஜூலை 2024, 8:43 pm

Din

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சனிக்கிழமை முதல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் தீவிரமடையாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 15- ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டமும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி அணைக்கு 3,122 கனஅடி நீா்வரத்துடன், நீா்மட்டமும் 128.05 அடியாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து அணையிலிருந்து தமிழகத்துக்கு குடிநீா், விவசாயப் பணிக்காக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 1,400 கன அடிநீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

கூடுதல் நீா் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தமபாளையம், சின்னமனூா், க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி போன்ற பகுதிகளில் முதல் சாகுபடிக்காக நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.