கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மழைப் பொழிவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவும் படிப் படியாக குறைந்து வருகிறது.

News image
முல்லைப் பெரியாறு அணை. (கோப்புபடம்)
Updated On :21 ஜூலை 2024, 8:30 pm

Din

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப் படியாக குறைந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், மழைப்பொழிவு தீவிரமடையாததால் அணைக்கு நீா்வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி முதல் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6264 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து 6 நாள்களாக உயா்ந்து வந்தது.

தற்போது, நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 2268 கன அடியாக குறைந்தது. தற்போது, அணையின் நீா்மட்டம் 128.40 (152) அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீா், விவசாயப் பணிக்காக விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.