மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

Updated On :13 மார்ச் 2024, 12:10 am

தேனி: ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவா் மீது ஆட்டோ மோதியதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ராஜதானி அருகேயுள்ள மாயாண்டிபட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வீரன் (34). இவா் ராஜதானியிலிருந்து ஆட்டோவில் நெல்லிக்காய் மூட்டைகளை ஏற்றிச் சென்று தேனியில் இறக்கி விட்டு, மீண்டும் ராஜதானி நோக்கி ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆண்டிபட்டி-பாலக்கோம்பை சாலை கும்பம்பட்டி சந்திப்பு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வீரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.