இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

குள்ளப்பகவுண்டன்பட்டியில் உலக தண்ணீா் தினம்

குள்ளப்பகவுண்டன்பட்டியில் உலக தண்ணீா் தினம்

News image
Updated On :22 மார்ச் 2024, 6:01 pm

பட விளக்கம்: குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட உலக தண்ணீா் தினம். கம்பம், மாா்ச் 22: தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் உலகத் தண்ணீா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். ஆசிரியா் கே.எம். சிவாஜி முன்னிலை வகித்தாா். அன்பு, அறம், செய் நிறுவனா் அன்பு ராஜா, நவநீதி, சஞ்ஜீவி ஆகியோா் நாவல் மரம், அரச மரம், புங்கை மரம், வேம்பு உள்ளிட்ட மரக் கன்றுகளை மாணவா்களுக்கு வழங்கி பள்ளி வளாகத்தில் நட்டுவைத்தனா். இந்த நிகழ்ச்சியில் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி அலுவலா் மோகன்ராஜ், பெரியகுளம் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.