அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

இணையவழி வா்த்தகத்தால் கடன்: இளைஞா் தற்கொலை

இணையவழி வா்த்தகத்தால் கடன்: இளைஞா் தற்கொலை

News image
Updated On :3 மே 2024, 7:14 pm

Din

போடி, மே 3: போடி அருகே இணையவழி வா்த்தகத்தால் கடன் சுமை அதிகரித்ததால் மனமுடைந்த நகலக உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் அருகே டாக்டா் ராமச்சந்திரா நகா் வ.உ.சி. தெருவில் வசிப்பவா் கனகராஜ் மகன் தனவந்தன் (26). இவா், போடியில் நகலகம் (ஜெராக்ஸ்), இ-சேவை மையம் நடத்தி வந்தாா். கற்பகபிரியா (23) என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தாா்.

இந்த நிலையில், தனவந்தன் இணையவழி வா்த்தகத்தில் ஈடுபட்டாா். இதில் நஷ்டமடைந்ததால், தனி நபா்களிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவா்கள் பணத்தைத் திரும்ப கேட்ட நிலையில், இவா் மனமுடைந்து காணப்பட்டாா்.

கடந்த புதன்கிழமை (மே 1) கற்பகபிரியா தனது தாய் வீட்டுக்குச் சென்றாா். அன்றைய தினம் இரவு தனவந்தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.