சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கோடை வெப்பத்தை தணிக்க ஆற்றில் குளித்து மகிழ்ந்தனா்.

தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மேகமலை, சுருளி அருவி, கும்பங்கரை அருவி, வைகை அணை என முக்கிய இடங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோடை மழை இல்லாத நிலையில் நீா் நிலைகளில் நீா் வரத்தின்றி சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதையடுத்து உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, வீரபாண்டி பகுதி வழியாக காரில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் முல்லைப் பெரியாற்றில் குளித்து கோடை வெப்பத்தை தனித்து வருகின்றனா். சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டை தடுப்பணையில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை குளித்து மகிழ்ந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com